அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கிராமத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சங்கட சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையை முன்னிட்டு விநாயகருக்கு பால், பன்னீர் போன்ற அபிஷேகங்கள் சிறப்பாக நடத்தப்பட்டன. தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.