அரியலூர் அருகே சிறுகடம்பூரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான செல்லியம்மன் கோயிலில் சித்திரை தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். கிராம மக்கள் தன்னார்வத்துடன் தேர் கட்டும் பணிகளில் ஈடுபட்டனர்.