தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கை தலைவரும், சிறந்த மக்கள் சேவகருமான அஞ்சலை அம்மாளின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது. அரியலூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், அஞ்சலை அம்மாளின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சிவக்குமார் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.