அரியலூர் புறவழிச் சாலையில் தவுத்தாய் குளம் செல்லும் சாலையின் ஓரத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால், குடிநீர் வடிகால் அதிகாரிகள் உடனடியாக உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.