ஜெயங்கொண்டம் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் சிங் என்பவரது மகன் ஹரிஹரன் (17) உய்யகொண்டான் ஏரி அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி ஹரிஹரனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.