அரியலூர் மாவட்டம் இரும்புலிக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆனந்தவாடி பிரிவு ரோட்டில், பொதுமக்கள் செல்லும் பாதையில் இருசக்கர வாகனத்தை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இரும்புலிக்குறிச்சி காவல் நிலையத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.