மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 'WILL POWER' தான் அரசியலுக்கும் அவசியம் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இன்று (டிச.3) கூறியதாவது, ‘மாற்றுத்திறனாளிகள் கலைஞரை 'ROLE MODEL' ஆக எடுத்து செயல்பட வேண்டும். ஒரு விபத்தில் அவருக்கு கண்ணில் பாதிப்பு ஏற்பட்டது, இருந்தாலும் அந்த வலியையும் பொருட்படுத்தாமல் இறுதிவரை சமூகத்திற்காக உழைத்தார். முதுமை காலத்தில் சக்கர நாற்காலியில் தான் வலம் வந்தார்” என்றார்.