ஜப்பானின் 'சயின்ஸ்' (Science) நிறுவனம் மனிதர்களை குளிப்பாட்டி விடும் புதிய தானியங்கி இயந்திரத்தை அறிமுகப்படுத்தி, தொழில்நுட்ப உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இயந்திரத்திற்குள் படுத்துக் கொண்டால், அது தானாகவே குளிப்பாட்டி, உடலைக் காய வைக்கும் பணிகளைச் செய்கிறது. மேலும், மனதை லேசாக்கும் இசை மற்றும் காட்சிகளை உள்ளேயே ஒளிபரப்பும் வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரத்தின் விலை ரூ.3.47 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.