தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், வாழை மரங்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. முகூர்த்த நாட்கள் என்பதால் வாழை இலைகள் பெரிய இலை கட்டு ஆயிரம் ரூபாய் என்றும் சற்று சிறிய ரகம் 800 ரூபாய் என்றும், அதற்கு சிறிய ரகம் 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. மழையால் வாழை மரங்கள் நாசமானதால், செய்வதறியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.