முதலமைச்சர்
விஜய் அறிவித்த வாக்குறிதியான பெண்களுக்கு மாதம் ரூ.2,500 விரைவில் வழங்குவதாக அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். இந்தத் தொகையைப் பெற, பயனாளிகள் மூன்று முக்கிய நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதன்படி, வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். மேலும், விரல் ரேகை அல்லது மொபைல் OTP மூலம் e-KYC சரிபார்ப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். அதேபோல், குடும்ப ஸ்மார்ட் கார்டுடன் மொபைல் எண்ணும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் எனப்படுகிறது.