ஓலா, உபேர் போன்ற தனியார் டாக்ஸி நிறுவனங்களுக்கு போட்டியாக, மத்திய அரசின் 'பாரத் டாக்ஸி' சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. முதல் கட்டமாக தலைநகர் டெல்லியில் 650 டாக்ஸிகளுடன் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. அதன் பின்னர், 2026-ம் ஆண்டுக்குள் இந்தியாவின் 20 முக்கிய நகரங்களுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த சேவை தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.