ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன்

3120பார்த்தது
ஆர்எஸ்எஸ் தொடர்ந்த அவதூறு வழக்கு.. ராகுல் காந்திக்கு பிவாண்டி நீதிமன்றம் ஜாமீன்
ஆர்எஸ்எஸ் நிர்வாகி தொடர்ந்த அவதூறு வழக்கு காரணமாக ராகுல் காந்தி, மகாராஷ்டிராவின் பிவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரானார். அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மகாத்மா காந்தி கொலையில் ஆர்எஸ்எஸ்-க்கு தொடர்பு இருப்பதாக கடந்த 2014-ம் ஆண்டு ராகுல் காந்தி கூறியதற்கு எதிராக அப்போது பிவாண்டியின் ஆர்எஸ்எஸ் அலுலகப் பொறுப்பாளராக இருந்த ராஜேஷ் குந்தே என்பவர் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், பிவாண்டி நீதிமன்றம் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது.