புதிய அரசு பொறுப்பேற்பதற்காக, பிகார் முதலமைச்சராக 20 ஆண்டுகளாகப் பதவி வகித்துவரும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் நிதீஷ் குமார் இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். எனினும், சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) 202 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்தக் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் நிதீஷ் குமாரே மீண்டும் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளது. இன்று அவர், எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்ட கடிதத்துடன் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஆதரவு கோருவார்.