சென்னை பெருங்களத்தூர் ரயில் நிலையம் அருகே இன்று (நவ.19) பாஜக பிரமுகர் ஒருவரை ஓட ஓட விரட்டி வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் நண்பருடன் சென்று கொண்டிருந்த அவரை, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.