தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேர்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று (ஏப்.9) திமுக அமைச்சர் கே.என்.நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறியதாவது, “அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பேசுவதற்கு ஒன்றும் இல்லாததால், வாய்க்கு வந்ததை பேசி வருகிறார்” என விமர்சித்தார். தொடர்ந்து, “அதிமுக மற்றும் பாஜக உடன் தவெக தலைவர் விஜய் மறைமுக தொடர்பில் உள்ளார்” என்றார்.