அண்ணா பல்கலை., மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் குறித்த செய்திகளை கேட்கும்போது ரத்தம் கொதிப்பதாக இயக்குநர் மோகன்.ஜி வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது, “மாணவி பலாத்காரம் விவகாரத்திற்கு பின்னால் முக்கிய புள்ளிகள் இருப்பதாக தெரிகிறது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் விடுதிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, அதன் ஒரு பதிவு அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு நேரடியாக செல்லும்படியான திட்டத்தை தமிழக அரசு கொண்டுவர வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.