திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதலமைச்சர்
விஜய் நாளை (ஜூன் 01) திருச்சி செல்லும் நிலையில், வெடிகுண்டு மிரட்டலால் பரபரப்பு நிலவுகிறது. ஆட்சியர் அலுவலக பகுதியில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல்முறையாக
விஜய் திருச்சியில் நடக்கும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார்.