சென்னை வில்லிவாக்கத்தில் நடைபெற்ற தவெகவின் பொதுக்கூட்டத்திற்குள் மதுபாட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து சென்னை போலீசார் விளக்கமளித்துள்ளனர். அவர்கள் கூறுகையில், “அயனாவரத்தில் தவெக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே உள்ள லாட்ஜில் மதுபோதையில் இருந்த இருவர் சண்டையிட்டு கொண்டனர். அப்போது அவர்களுக்குள் மாறி மாறி மதுபாட்டில் வீசிகொண்டபோது தவறுதலாக பொதுக்கூட்டத்தில் விழுந்தது” என்றனர்.