ஹைதராபாத் வனஸ்தலிபுரம் கிரீன் சிட்டி காலனியில் 3 மாத கர்ப்பிணி சுனிதா (29) அவரது முன்னாள் கணவர் மகேஷால் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டார். சம்பவத்திற்குப் பிறகு வீட்டிலேயே மறைந்திருந்த மகேஷை போலீசார் கைது செய்தனர். 2024ல் இருவரும் விவாகரத்து பெட்ரா நிலையில், சுனிதா மறுமணம் செய்துகொண்டதால் ஏற்பட்ட விரோதமே இந்த கொலைக்கு காரணம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.