மூட்டுகளில் தேய்ந்து போன குருத்தெலும்புகளை இயற்கையாக மீண்டும் வளரச் செய்யும் புதிய முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். வயது முதிர்வால் அதிகரிக்கும் 15-PGDH என்ற புரதத்தை செயலிழக்கச் செய்தால், உடலில் உள்ள ஸ்டெம் செல்கள் தூண்டப்பட்டு குருத்தெலும்புகள் இயற்கையாக மீள வளர முடியும் என தெரிய வந்துள்ளது. எலிகளில் நடத்தப்பட்ட சோதனைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், எதிர்காலத்தில் மனிதர்களுக்கு இந்த மருந்து பயன்படும்.