தவெகவில் இணையப்போவதாக வெளியான தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், எம்.எல்.ஏ-வாகத் தனது கடமையை மக்களுக்காக முழுமையாக ஆற்றுவேன் என அதிமுக மூத்த தலைவர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் தவெகவில் இணையவுள்ளதாக வந்த செய்தி முதல்வர்
விஜய் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தன்னைத் தேர்ந்தெடுத்த மயிலம் தொகுதி மக்களுக்கு அவர் நேரில் நன்றி கூறியுள்ளார்.
நன்றி: நியூஸ் தமிழ்