டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து.. 3 பேர் பலி

23பார்த்தது
டிப்பர் லாரி மீது கார் மோதி விபத்து.. 3 பேர் பலி
கடலூர் மாவட்டம் அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில், 3 பேர் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. திட்டக்குடி அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டிப்பர் லாரியை கார் முந்த முயன்றுள்ளது. அப்போது ஏற்பட்ட கோர விபத்தில் காரில் பயணித்த 3 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்தவர்களின் விவரங்களை சேகரித்து வருகின்றனர். மேலும் அவர்களது உடல்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்புடைய செய்தி