ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம்.. புதிய திட்டம்

55பார்த்தது
ரேஷன் பொருட்களுக்கு பதிலாக பணம்.. புதிய திட்டம்
ரேஷன் கடைகளில் வாங்கும் பொருட்களுக்குப் பதிலாக பணத்தை வழங்க மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குடும்ப உறுப்பினர்களுக்கு ஏற்ப பணம் வழங்குவதாக தெரிகிறது. இந்த திட்டத்திற்கு ‘இ-ரூபி’ என்ற டிஜிட்டல் முறை பயன்படுத்தப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. ரேஷன் பொருட்களுக்கான பணத்தைப் பெற பயனாளியின் செல்போன் எண்ணுக்கு  வவுச்சர் அனுப்பப்படவுள்ளது. அதனை பணமாக மாற்றி வங்கியில் வைக்கலாம் அல்லது விருப்பப்பட்டால் பொருளாகவும் வாங்கலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி