காஸா மீது 2 ஆண்டுகளாக இஸ்ரேல் நடத்தி வந்த தாக்குதலில் 67,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் பலியாகினர். இந்நிலையில், இஸ்ரேஸ்-ஹமாஸ் இடையே கடந்த 11-ம் தேதி முதல் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலுக்கு வந்தது. இதனை இறுதி செய்வதற்காக அமெரிக்க அதிபர் டிரம்ப் இஸ்ரேல் புறப்பட்டார். இதனிடையே ஹமாஸ் அமைப்பு 20 பணய கைதிகளை சிறை பிடித்திருந்தது. போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியாக அவர்களில் 7 பேரை தற்போது விடுவித்துள்ளது.