சென்னை பாரிமுனை அருகே கணக்கெடுப்பு என்ற பெயரில் தவெகவினர் சிலர், ராயபுரத்தை சேர்ந்த வனஜா, ஸ்ரீலேகா, ரஹீமா ஆகியோரிடம் தங்களது கட்சிக்கு வாக்களிக்க வற்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர்கள் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், தொடர்ந்து தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.