கட்டுமான நிறுவன உரிமையாளரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததை எதிர்த்த வழக்கில், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அருண் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கமளித்தார். நீதிமன்ற சம்மனை வழங்கச் சென்ற அதிகாரியை, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகத்தில் 2 மணி நேரம் காக்க வைத்ததற்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.