சென்னை அசோக் நகரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்து அத்துமீறியதாக பிரவீன் சரண் என்கிற சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கைதான நபர் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து அத்துமீறுவதை வாடிக்கையாக கொண்டவர் எனத் தெரிவித்தனர்.