சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்வில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் அலுவலகப் பயன்பாட்டிற்காக 47 லட்சம் ரூபாய் மதிப்பிலான 5 புதிய வாகனங்களை முதல்வர் முக ஸ்டாலின் ஒட்டுநர்களிடம் சாவிகளை வழங்கி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வு வாரியத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது.