அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் சென்னையில் பேசுகையில்; கொளத்தூர் தொகுதியில் நேற்று பேசினேன், அப்போது ஸ்டாலின் கொரோனா காலத்தின் போது மக்களுக்கு சரியான ஆலோசனை வழங்கவில்லை. இப்போ போட்டோ எடுக்கிற ஸ்டாலின் அப்போ எங்கே சென்றார் என்று கேட்டேன், அதற்கு புலம்புகிறார். என்னை பற்றி இபிஎஸ் தவறாக பேசுகிறார் என்கிறார். காணாமல் போனார் என்று தான் சொன்னே, தவறாக பேசவில்லை. ஆனால் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் நான் கால் உள்ளே இருக்கின்றேன் என கேவலமாக பேசுகின்றனர். நீங்கள் ஒரு வார்த்தை பேசினால் எனக்கு பத்து வார்த்தை பேச தெரியும். என்னைப்பற்றி பேசினால் உடனுக்குடன் பதிலடி கொடுப்பேன் என்று பேசினார்.