சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளராகப் பணிபுரியும் வாணி (39), வேலை தொடர்பாக மேலாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து, மருத்துவமனை கழிவறையில் இருந்த திராவகத்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு அதே மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.