மெரினா கடற்கரையில் குவிந்த மக்கள் கூட்டம்
சென்னை: விடுமுறை தினமான இன்று மெரினா கடற்கரையில் அதிகளவில் மக்கள் குவிந்தனர். குறிப்பாக குடும்பம் குடும்பமாக வந்து நீல கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுப் பொருட்களில் அமர்ந்து மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர். பலர் வாகனங்களில் அணிவகுத்து வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
