சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று மாலை ஒரு பெண் தனது குழந்தையை காணவில்லை என ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். புகாரை அடுத்து அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கன்னியாகுமாரி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஏசி பெட்டியில் குழந்தை இருப்பதை கண்டறிந்த அதிகாரிகள், குழந்தையை பத்திரமாக மீட்டெடுத்து தாயிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் தாய் மகிழ்ச்சி அடைந்தார்.