புளியந்தோப்பைச் சேர்ந்த சங்கர் (48), தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 11 ஆம் தேதி இரவு, திருமங்கலம் ஆபீசர்ஸ் காலனி மாநகராட்சி பூங்காவில் மரக்கிளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி காயமடைந்த சங்கர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.