சென்னை கே. கே. நகரில் நேற்று முன்தினம் (மே 18( இரவு துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பெண் ஊழியர்களிடம், போதையில் இருந்த ராஜ்குமார் (36) என்பவர் தகாத வார்த்தைகளை பேசி, தகராறில் ஈடுபட்டார். மேலும், ஒரு பெண் ஊழியரை கையைப் பிடித்து இழுத்து உல்லாசத்திற்கு அழைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.