வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ கருத்தரங்கின் இரண்டாம் நாள் அமர்வில், மூத்த ஊடகவியலாளர் ஏ. எஸ். பன்னீர்செல்வன் தலைமையில், திராவிட இயக்கம் பெண்கள், திருநர், மாற்றுத்திறனாளிகள், பட்டியல் சமூகம் மற்றும் மதச் சிறுபான்மையினர் வாழ்வில் ஏற்படுத்திய ஏற்றங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த அமர்வு திராவிட இயக்கத்தின் சமூகப் பங்களிப்பை மையப்படுத்தியது.