சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையால், புழல் ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றில் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வடபெரும்பாக்கம் பகுதியில் உள்ள சாலைகளில் முழங்கால் அளவிற்கு நீர் சூழ்ந்துள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், சாலைகளில் நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.