சென்னை அமைந்தகரையைச் சேர்ந்த 56 வயது அண்ணாதுரை, அதே நிறுவனத்தில் பணிபுரியும் 24 வயது பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். உடல்நலக்குறைவால் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பெண் கர்ப்பிணியாக இருந்தது தெரியவந்தது. பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், போலீசார் அண்ணாதுரையை கைது செய்தனர்.