சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ரோஜா என்பவர் கடந்த 12ம் தேதி அசோக் நகர் ஸ்ரீநாராயண மிஷன் பள்ளி அருகே தனது ஸ்கூட்டரை நிறுத்திவிட்டு கடைக்குச் சென்றபோது வாகனம் திருடுபோனது. இது குறித்து அசோக் நகர் போலீசார் விசாரித்து, ஸ்கூட்டரைத் திருடிய எழும்பூரைச் சேர்ந்த ஆகாஷ் (19) என்பவரைக் கைது செய்தனர். கடந்த 13ம் தேதி எழும்பூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மதுபோதையில் வாகனம் ஓட்டி ஆகாஷ் சிக்கியதையடுத்து இந்த திருட்டு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.