திருமங்கலம் என்விஎன் நகரைச் சேர்ந்த சஞ்சய் (24) மற்றும் பாரி அரசன் (25) ஆகிய இருவரும், 7 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களை மது அருந்தச் செய்து, மயங்கியதும் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இதை வீடியோ எடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, குழந்தைகள் நலக் குழுவிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில், திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், திங்கள்கிழமை போலீஸார் சஞ்சய் மற்றும் பாரி அரசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.