மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பீஜூல் (31) என்பவர், முகப்பேரில் கட்டடப் பணியின்போது உடல்நலக்குறைவால் அறையில் தங்கியிருந்தார். சக பணியாளர்கள் திரும்பியபோது, கழுத்தில் கயிற்றுடன் சுயநினைவின்றி கிடந்த அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். ஜெ. ஜெ. நகர் போலீசார், இது கொலை அல்லது தற்கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.