தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இல்லாததால் தவித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் தமிழக அரசியல் களம் தேர்தலுக்கு முந்தைய நிலையை விட அதீத பரபரப்பாகி விட்டது. இந்நிலையில், நீலாங்கரையில் உள்ள விஜய் வீட்டின் முன்பு தொண்டர் ஒருவர், "தமிழகத்தின் தங்கம்.. விஜய் முதலமைச்சராக ஆகணும்.. என் கடவுள், ஹீரோ அவர் தான். விஜயை அரியணை ஏற்றாமல் நாங்கள் ஓயமாட்டோம்" என கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.