சென்னை பெருநகர காவல் ஆணையர் அருண், கடந்த 22 மாதங்களில் சென்னையில் மட்டும் 184 கொலைகள் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இதில் 2024ஆம் ஆண்டில் 102 கொலைகளும், நடப்பு ஆண்டில் முதல் 10 மாதங்களில் 82 கொலைகளும் நடந்துள்ளன. இதே காலகட்டத்தில் 419 செயின் பறிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து பல குற்றங்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் அவர் கூறினார்.