பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.செளத்திரி நேற்று ராஜஸ்தான் மாநிலத்தில் கார் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தார். இந்தநிலையில் அவரது உடல் சென்னைக்கு இன்று கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து அவரது உடலுக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வந்தனர். இந்தநிலையில் தவெக தலைவர் விஜய், மயிலாப்பூரில் உள்ள அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். உடன் அவரது கட்சி நிர்வாகிகளுகு வந்திருந்தனர்.