ஓட்டேரியைச் சேர்ந்த இம்மானுவேல்(21) என்பவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சரண் மற்றும் சந்தோஷ் ஆகியோர் அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். தடுக்க வந்த இம்மானுவேலின் தங்கை சங்கீதாவையும் அவர்கள் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்த ஓட்டேரி போலீசார், சரண் மற்றும் சந்தோஷ் ஆகியோரைக் கைது செய்துள்ளனர்.