சென்னை ஆவடியில் உள்ள தனியார் மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் மகன், தனது தாயின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.