தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு
விஜய் முதன்முறையாகத் தனி விமானம் மூலம் இன்று (மே 27) டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து அவர்
பிரதமர் மோடியை சந்தித்துள்ளார். அப்போது தமிழ்நாடு சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் வழங்கியுள்ளார்.தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் அவர் சந்திக்கவுள்ளார். இன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் தங்கி ஓய்வெடுக்கும் முதலமைச்சர்
விஜய், நாளை (மே 28) சென்னை திரும்புகிறார்.