சென்னை வேப்பேரியில் தொழிலதிபரின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக்கொண்ட திலிப் என்ற வாலிபர், அவரிடம் இருந்து ஒரு கிலோ தங்கம், வைர நகைகள் மற்றும் 2.5 கிலோ வெள்ளிப் பொருட்களை அபகரித்ததாக கூறப்படுகிறது. பின்னர், தொழிலதிபரின் மனைவி அவருடனான தொடர்பை துண்டித்ததால், திலிப் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபரின் மனைவி வேப்பேரி போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.