சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் சோதனை நடத்தினர். இதில், தவெக ஆதரவாளரான எட்வின் ராஜ் பிரண்டோ (35) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டு, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.