சென்னை சைதாப்பேட்டையில் அமமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா விற்பவர்களுக்கு திமுக அரசே துணை நிற்பதாகவும் குற்றம்சாட்டினார். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும் என்றும், வாரிசு அரசியல் இந்த நாட்டுக்கு தேவையில்லை என்றும் அவர் கூறினார். திமுக கூட்டணி கட்சிகளைப் பார்த்தால் பரிதாபமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.