சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கார்களை வாங்கி விற்கும் பைனான்சியர் வீடு உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வங்கிக் கடன் மோசடி தொடர்பாக இந்த விசாரணை நடைபெற்று வருவதால், சென்னை காலை முதல் பரபரப்பாகியுள்ளது. சோதனைகள் குறித்த முழு விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.